மோகன்லால் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிரபல நடிகர் மோகன்லால் வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். 

அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை மோகன்லால் வீட்டில் வைத்திருக்க உரிய அனுமதி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து கேரள வனத்துறை அதிகாரிகளிடம் யானை தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக மோகன்லால் மற்றும் அவருக்கு தந்தங்களை விற்பனை செய்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு பெரம்பலூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள அரசு சார்பில் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து நவம்பர் 3ஆம் தேதி மோகன்லால் உட்பட 4 பேரும் ஆஜராக உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோகன்லால் கேரள உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன்லால் மீதான வலக்கை விசாரணை செய்ய 6 மாதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mohanlal interim stay imposed Supreme Court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->