பொன்னியின் செல்வன் பட வசூலை பாதிக்கப்போகும்? 'நானே வருவேன்'.! முந்திக்கொண்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான தனுஷ் தற்போது 'நானே வருவேன்' திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை செல்வராகவன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படிப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த 2011 வெளியான 'மயக்கம் என்ன' திரைப்படத்திற்கு பிறகு செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் மீண்டும் வெளியாக உள்ளதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள 'நானே வருவேன்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 300 முதல் 350 திரையரங்கில் வெளியாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனால், நாளை மறுநாள் (செப்டம்பர் 30) வெளியாக உள்ள  மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nane varuven movie Released 300 to 350 theatres in tamilnadu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->