ரசிகர்களுக்கு அதிர்ச்சி குடுத்த ராஷ்மிகா மந்தனா! இதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு! - Seithipunal
Seithipunal


மறைந்த நடிகை சௌந்தர்யா வாழ்க்கை வரலாறு படத்தில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிப்பேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகில் 1990 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சௌந்தர்யா கடந்த 2004 இல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இவர் தமிழில் பொன்னுசாமி, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, இவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சௌந்தர்யா வாழ்க்கை படமாக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வாழ்க்கை படமானால்  சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லா கதாநாயகிகளுக்கும் ஏக்கம் இருக்கும். எனக்கும் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் சௌந்தர்யாவாக நடிக்க ஆசை இருக்கிறது.

அது எனது கனவு. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சௌந்தர்யாவின் நடிப்புக்கு தீவிர ரசிகை. எனக்கு சௌந்தர்யா சாயல் இருப்பதாக பலர் பேசுகிறார்கள். அதனால் சௌந்தர்யா ஆக நடிக்க ஆசை அதிகமாகி கொண்டு வருகிறது. வாய்ப்பு வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika Mandanna wants to play the role of actress Soundarya in a movie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->