விஜய் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் யோசிக்கலாம் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் தீபாவளிக்கு முன்பாக மீண்டும் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் 2 கிலோ இலவச சர்க்கரை மற்றும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டு, தொடர்ந்து சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கு வீடு தேடிச் சென்று இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டம் ஆலோசனையில் உள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.


  மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தாராளமாக வழங்க அரசு எடுத்துள்ள இந்த முடிவு பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you get an invitation to the Vijay conference think about it Puducherry Chief Minister Rangasamy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->