மீண்டும் சினிமாவில் நடிக்கும் விஜய்?...இயக்குநர் சசிகுமார் OPEN TALK! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் சசிகுமார். சுப்ரமணியபுரம் திரைப்படம் இன்றளவும் மக்கள் மத்தியில் விமர்சங்களை பெற்று வருகிறது. பின்னர்  'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார், தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. 

மேலும் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'நந்தன்' திரைப்படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் சுருதி பெரியசாமி கதா நாயகியாக இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் சசிகுமார் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகுமார், ஈசன் படத்துக்குப் பிறகு நான் நடிகர்  விஜய்யிடம் கதை கூறினேன் என்றும்,  அது ஒரு வரலாற்று சம்பந்தப்பட்ட கதை. விஜய்யிக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. அவரே தயாரிப்பாளரையும் காட்டினார். 

ஆனால், அந்த நேரத்தில் அதன் பட்ஜெட், விஎப்எக்ஸ் எல்லாம் மிகவும் செலவுமிகுந்ததாக இருந்தது. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அடுத்த ஒரு படத்தோடு விஜய் ஓய்வு பெறக்கூடாது என நினைக்கிறேன். அரசியலில் இருந்தும் அடிக்கடி படம் நடிக்கலாம். விஜய் சினிமாவில் ஓய்வு பெறமாட்டார் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay to act in cinema again Director Sasikumar OPEN TALK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->