#BigBreaking || வாபஸ் - தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்குமா? சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது கல்வீச்சு, பேருந்துக்கு தீ வைத்தல் உள்ளிட்ட கலவர செயல்களில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தெரிவித்திருந்தார்.

தனியார் பள்ளிகளின் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில் 91 சதவீத பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை  அதிகாரிகள், அமைச்சர் உடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் இன்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தனியார் பள்ளிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்றும் தனியார் பள்ளிகள் கூட்ட அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Private School Strike vapus


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->