குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வு எப்போது? - வெளியானது முக்கிய அறிவிப்பு...!
tnpsc
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று குரூப் 1 ஏ தேர்வுக்கு மொத்தம் 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும் படி கேட்டு கொள்ளப்படுகிறது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.