நாக்பூரில் 144 தடை உத்தரவு; வண்டிகளுக்கு தீ வைத்து வன்முறை; பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


 நாக்பூரில்  ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களால் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. அங்கு பிறவியை வதந்தி ஒன்றை அடுத்து இந்த வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், இன்று மார்ச் 17 தேதி மாலை ஒரு பிரிவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.  அத்துடன், மாலை நேரத்தில், ஒரு பிரிவினர் மத நிந்தனை செய்து விட்டதாக வதந்திகள் பரவியதையடுத்து வன்முறைகள் வெடிக்க தொடங்கின. இதனால் ஆத்திரத்தில் ஒரு பிரிவினர் வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதனால் அந்த நகரம் முழுவதும் பெரும் பரபரப்பும்  நிலவியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மஹாராஷ்டிரா  முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், நாக்பூர் தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, 'வன்முறை சம்பவங்களுக்கு வதந்தி பரவியதே காரணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நாகபூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

144 prohibitory orders in Nagpur Violence by setting vehicles on fire


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->