இறுதி சடங்கில் இடிந்து விழுந்த சுவர் - 15 பெண்கள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் நகரில் உள்ள கமல்பூர் ராகாவ்லி என்ற கிராமத்தில் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்ற பெண்கள் சுவர் இடிந்து காயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர் பேசுகையில், "எனது உறவினரை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், அவருடைய உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என பலரும் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 15 பெண்கள் வரை சிக்கி பலத்த காயமடைந்துள்ளனர். 

உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கமல்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றுத் தெரிவித்துள்ளார். இறுதி சடங்கில் கலந்துகொண்ட பெண்கள் சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 womans injured of wall collapse funeral function in uttar pradesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->