குஜராத் : கண் சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


அகமதாபாத்தில் உள்ள கண் சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மோடி கண் சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த தீ விபத்து குறித்து மோடி கண் சிகிச்சை மைய அதிகாரிகளுக்கு காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் தீயணைப்புக் குழுவினர் வந்து பார்த்தபோதும் மருத்துவமனையில் மருத்துவமனையில் புகை மட்டுமே இருந்துள்ளது.

மேலும் தீயணைப்புக் குழு மருத்துவமனையில் இருந்து இரண்டு சடலங்களை மீட்டனர். பலியானவர்கள் நரேஷ் பார்கி மற்றும் அவரது மனைவி ஹன்சா என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் மருத்துவமனையில் பணியாற்றி, மருத்துவமனை வளாகத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட தீ, தானாகவே அணைக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் தம்பதியர் இறந்திருக்கலாம் என்று அகமதாபாத் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் தலைமை அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 dead in fire at eye care centre in Ahmedabad Gujarat


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->