ஜம்மு காஷ்மீர் : எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!
2 terrorist killed by shot in Jammu Kashmir poonch
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட்டின் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் இரண்டு பேர் ஆயுதங்களுடன் இந்தியா எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
இதைப் பார்த்த பாதுகாப்பு படையினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
2 terrorist killed by shot in Jammu Kashmir poonch