'ரீல்ஸ்' மோகத்தால் ரெயில் மோதி பலியான 3 வாலிபர்கள்.! - Seithipunal
Seithipunal


பெங்களூரு அருகே ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலன் (வயது 24), ராகுல்(18), பிகேஷ்(20) ஆகிய 3 பேரும்  கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா பகுதியில் வசித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் தொட்டபள்ளாப்புராவில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று மாலை சம்பவத்தன்று வேலை முடிந்ததும் நிறுவனத்தில் இருந்து 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது தொட்டபள்ளாப்புரா சித்தேநாயக்கனஹள்ளி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்த 3 பேரும், அங்கு ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற 3 பேர் மீதும் மோதியது.

இதில் லலன், ராகுல், பிகேஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து 3 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு அருகே ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 Teenagers Killed In Train Collision With Reels


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->