ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி மீண்டும்: பேட்டக்கு பிறகு புதிய மாஸ் ப்ராஜெக்ட்?
Rajinikanth Karthik Subbaraj alliance again New mass project after Petta
சென்னை:கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதையம்சங்களால் கவனம் பெற்ற கார்த்திக் சுப்புராஜ், 2019-ல் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்த பேட்ட திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ரஜினிக்கு ஃபேன் பாய் ஓர் அற்புத அனுபவமாக இருந்த அந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பேட்ட வெற்றிக்கு பிறகு, தனுஷ் மற்றும் விக்ரம் நடித்த படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், சமீபத்தில் சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ரெட்ரோ திரைப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெட்ரோ திரைப்படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள அடுத்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், பேட்டக்கு பிறகு 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த ஜோடி இணைவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' மற்றும் நெல்சன் இயக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய ப்ராஜெக்ட்டில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் பேச்சுக்கே அல்லாமல், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
இந்த செய்தி ரஜினிகாந்த் ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. “பேட்ட 2” ஆக உருவாகுமா என்ற ஊகமும் எழுந்துள்ளது!
English Summary
Rajinikanth Karthik Subbaraj alliance again New mass project after Petta