பாத்ரூமில் ரகசிய அறை வைத்து பலான தொழில்.. 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபச்சார தொழில் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒலலாகெர டவுன் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியின் கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபச்சாரத் தொழில் நடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்தனர். அப்போது விடுதியில் உள்ள கழிவறையின் ஒரு பகுதியில் டைல்ஸ் போடப்பட்டது போல் மூடி போட்ட ரகசிய அறை இருந்துள்ளது.

அதன் பின்னர் அந்த அறைக்குள் போலீசார் சோதனை செய்தபோது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவர்கள் இருவரையும் அந்த அறைக்குள் இருந்து மீட்டு விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலிஸார் தெரிவிக்கையில், சித்ரதுர்கா அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் கழிவறையில் ரகசிய அறை அமைத்து விபச்சாரம் செய்து வந்த 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டவர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 arrested for keeping secret room in bathroom


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->