ஜம்மு காஷ்மீர் : தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி.! 9 பேர் காயம்
4 killed 9 injured in terrorist attacks in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீரில் 3 இந்து வீடுகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் தெற்கே உள்ள அப்பர் டாங்கிரி என்ற மலையோர கிராமத்தில் புகுந்த பயங்கரவாதிகள் நேற்று 50 மீட்டர் இடைவெளியில் இந்துக்களின் மூன்று வீடுகளின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு கிராமவாசிகள் இறந்தனர் மற்றும் 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ரஜோரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் விமானம் மூலம் ஜம்மு நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சதீஷ் குமார்(45), தீபக் குமார்(23) மற்றும் பிரீதம் லால்(57) மற்றும் மருத்துவமனையில் இறந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக ஜம்மு மண்டல ஏடிஜிபி முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
4 killed 9 injured in terrorist attacks in Jammu Kashmir