வெடித்து சிதறிய கொதிகலன் - 8 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் டோம்பிவிலி எம்ஐடிசி பகுதியின் 2 ஆம் கட்டத்தில் அமுதன் கெமிக்கல்ஸ் அமைந்துள்ளது. இந்த கெமிக்கல்ஸில் உள்ள கொதிகலன் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏற்பட்டதையடுத்து, தீ, அருகில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு பரவியது. 

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தக் கோர விபத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 peoples died in maharastra for fire accident


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->