ஒரே நாளில் போராட்டத்தை கையிலெடுத்த ஆம் ஆத்மி- பா.ஜனதா: டெல்லியில் போலீசார் குவிப்பு! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் பா. ஜனதா கட்சிகள் ஒரே நாளில் போராட்டம் அறிவித்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஹரியானா மேயர் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பாஜக முறை கேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. 

மேலும் டெல்லியில் பா. ஜனதாவை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதே சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தவும் பாஜக திட்டமிட்டு இருந்தது. 

இந்நிலையில் இரண்டு கட்சிகளும் இன்று போராட்டம் நடத்துவதால் டெல்லியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aam Aadmi BJP protest same day in Delhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->