இழுபறியில் உள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை !! - Seithipunal
Seithipunal


கலால் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அமலாக்க துறை இந்த ஜாமீனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உடனே டெல்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் இந்த மனு மீது முடிவு எடுக்கும் வரை ஜாமீன் அமலில் இருக்காது என்று கூறியது. வருகின்ற செவ்வாய் கிழமை தீர்ப்பை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலால் கொள்கை வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த ஜூன் 20 இரவு 8 மணிக்கு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்திடம் நேரடி ஆதாரம் இல்லை என்று நீதிபதி அமர்வு கூறியது. ஜாமீனுக்காக ரூ.1 லட்சம் ஜாமீன் பத்திரத்தை நிரப்புமாறு கெஜ்ரிவாலிடம் நீதிமன்றம் கூறியிருந்தது.

இதற்க்கு ஆட்சேபம் தெரிவித்த அமலாக்க துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதற்க்கு எதிர் மனு தாக்கல் செய்தது. விசாரணையின் போது நீதிமன்றம் தனது வாதங்களைக் கேட்கவில்லை என்று அமலாக்க துறை குற்றம் சாட்டியது. விசாரணையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளோம். அவர் வெளியே வந்தால், விசாரணையை பாதிக்கலாம் அமலாக்க துறை தெரிவித்துள்ளது.

அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் , நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முற்றிலும் தவறானது. எங்களிடம் நேரடி ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது நீதிமன்றத்தின் தவறான அறிக்கை. நாங்கள் பொருளைக் காட்டினோம், ஆனால் நீதிமன்றம் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. தவறான உண்மைகளின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்தது. எனது குறிப்பு பரிசீலிக்கப்படவில்லை, வாதிட அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றம் எங்களின் வாதங்களைக் கேட்கவில்லை, நாங்கள் அளித்த ஆதாரங்களை சரியாக ஆராயவில்லை, சரியான பரிசீலனையின்றி எங்களது கவலைகளை தள்ளுபடி செய்து விட்டது என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கெஜ்ரிவால் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான டெல்லி மதுபானக் கொள்கையைத் தயாரிக்கும் போது பணமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. 

டெல்லி கலால் கொள்கை சர்ச்சையை அடுத்து, அது ரத்து செய்யப்பட்டு, பழைய கொள்கையே அமல்படுத்தப்பட்டது. மது விற்பனையாளர்களிடமிருந்து கெஜ்ரிவால் பெற்ற பணம் கோவாவில் கட்சியின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக ED குற்றம் சாட்டியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi leader Arvind Kejriwals release in drag


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->