அந்தமான் நிக்கோபார் தீவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்.! பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் முதல் நிலநடுக்கம் மதியம் 1.19 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக மதியம் 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது நிக்கோபார் தீவில் 140 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் மூன்றாவது முறையாக அந்தமான் நிக்கோபார் தீவின் கடல் பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி, 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் 140 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andaman and Nicobar Islands after a series of earthquakes


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->