ஆந்திரா : எண்ணெய் ஆலையில் மூச்சுத்திணறி 7 பேர் பலி..‌உரிமையாளர் மீது வழக்குப் பதிவு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் மண்டலம் ஜி.ராகம்பேட்டையில் அம்பட்டி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது.

இந்த நிலையில் எண்ணெய் டேங்க்கரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளனர். மேலும் சில தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra 7 people died in oil plant case filed against the owner


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->