கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்.!
Attack on Dalit youth entered the temple in udhrakhand
கோவிலுக்குள் நுழைந்ததால் தலித் இளைஞர் மீது தீப்பந்தம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் பைனொல் கிராமத்து சேர்ந்த வாலிபர் ஆயூஸ் (வயது 21). பட்டியலென சமூகத்தை சேர்ந்தவரான இவர் கடந்த ஒன்பதாம் தேதி அருகில் உள்ள கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர், தலித் இளைஞரான ஆயூஷை தடுத்து நிறுத்தினர். மேலும் இளைஞரை தீப்பந்தத்தால் கொடூரமாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த தலித் இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சாமி கும்பிட கோயிலுக்கு சென்ற தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்துகிறோம் இது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Attack on Dalit youth entered the temple in udhrakhand