டெல்லியில் சர்வதேச இந்திய நடன திருவிழா: துணை ஜனாதிபதி ஜக்திப் தங்கர் உரை
International Dance Festival of India in Delhi Address by Vice President Jagdip Thangar
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச இந்திய நடன திருவிழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில், இந்திய துணை ஜனாதிபதி ஜக்திப் தங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது, கலை மற்றும் கலாச்சாரத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். "கலை ஆதிக்கத்தை வரையறுக்கவில்லை, அது ஒருங்கிணைப்பை வரையறுக்கிறது. கலாச்சார ராஜதந்திரத்தின் சிறந்த அம்சம் நடனம். நடனம் மற்றும் இசை மோதல்கள் நிறைந்த உலகில் மக்களை ஒன்றிணைக்கிறது. நடன கலைஞர்கள் தான் கலாசாரம் மற்றும் அமைதிக்கான தூதர்கள்" என்று அவர் பேசினார்.
இவ்விழா இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியதுடன், உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய கலைஞர்களையும் ஒற்றுமையையும் கொண்டாடியது.
English Summary
International Dance Festival of India in Delhi Address by Vice President Jagdip Thangar