உத்தரபிரதேசம்: ஆடிட்டர் சுட்டுக்கொலை.! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆடிட்டரை சுட்டுக்கொன்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம் கங்காநகரில் வசித்து வந்தவர் ஆடிட்டர் ஸ்வேதப் திவாரி(53). இவர் மஜ்கோலாவில் வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, திடீரென மர்ம நபர் ஒருவர் ஸ்வேதப் திவாரியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக ஸ்வேதப் திவாரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஸ்வேதப் திவாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auditor shot dead by a mysterious person in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->