மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் இந்தக் குழந்தை, நேற்று பிற்பகல் காணாமல் போயுள்ளது. இதனால் பதறிப்போன குழந்தையின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது:- "குழந்தையை திருடிய பெண்ணை கண்டுபிடிக்க நான்கு குழுக்களை அமைத்துள்ளோம். அனைத்து சோதனை சாவடிகளிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போலீசார் பேருந்துகள் மற்றும் ரெயில்களில் சோதனை செய்து வருகின்றனர்" என்றுத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

baby kidnape in odisa hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->