14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! சிறுவன் கைது.!
Boy arrested for rape 14 year old girl in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த சிறுவனும் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளான். மேலும் சிறுமியை சம்பவத்தன்று ஸ்கூட்டரில் வெளியே அழைத்துச் சென்று, யாரும் இல்லாத இடத்தில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதையடுத்து சிறுமியை இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளான். ஆனால் சிறுமி இந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறிய நிலையில், இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர்.
English Summary
Boy arrested for rape 14 year old girl in Karnataka