நீட் தேர்வு முறைகேடு : எம்பிபிஎஸ் மாணவர்கள் 3 பேர் கைது - காவலில் எடுத்து சிபிஐ விசாரணை..!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், எய்ம்ஸ் - பாட்னா கல்லூரியைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர்கள் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கடந்த மே மாதம் நடந்த நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து இந்த வழக்கில் பீகார், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த முறைகேடு தொடர்பாக எய்ம்ஸ் - பாட்னா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் 3 பேரை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

இவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கும் அதிகாரிகள், மாணவர்களின் விடுதி அறையைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். முன்னதாக ஜூலை 16ம் தேதி ஜார்கண்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக கைதான முக்கிய குற்றவாளிகளான பங்கஜ் குமார் மற்றும் ராஜு சிங் ஆகியோர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்த மாணவர்கள் மூவரும் தான் வினாத்தாள் கசிவில் தொடர்புடைய கும்பலுக்கு வினாத்தாளுக்கான விடைகளை வழங்கியது என்றும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மாணவர்களை சிபிஐ கைது செய்துள்ள சம்பவம் எய்ம்ஸ் - பாட்னா மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI Probes 3 MBBS Students in NEET Malpractice


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->