கேம் விளையாடுவதை கண்டித்த பெற்றோர் - கல்லூரி மாணவன் செய்த கொடூரச் செயல்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெகத்சிங்பூர் மாவட்டம் ஜெயபடாசெதி ஷகி பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த் கலியா-கனக்லதா தம்பதியினர். இவர்களுக்கு ரோஸ்லின் என்ற மகளும், சூர்யகாந்த் என்ற மகனும் இருந்தனர். 

கல்லூரி மாணவரான சூர்யகாந்த் தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். இதன் காரணமாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த சூரியகாந்தை, அவரது பெற்றோரும், அக்காவும் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யகாந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தந்தை பிரசாந்த், தாயார் கனக்லதா, அக்கா ரோஸ்லின் உள்ளிட்ட மூன்று பேரையும் கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு அருகில் உள்ள கிராமத்தில் தலைமறைவாகியுள்ளார். 

காலை பொழுது விடிந்தும் நீண்ட நேரமாக பிரசாந்த் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், கிராமத்தில் பதுங்கி இருந்த சூர்யகாந்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college student arrested for kill her family in odisa


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->