ராகிங் செய்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
College student committed suicide by hanging in odisha
ஒடிசாவில் ராகிங் செய்ததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவர் தங்கிருந்த இடத்தில் ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில் தன்னுடன் பாடிக்கும் சீனியர் மாணவிகள் மூன்று பேர் தன்னை ராகிங் செய்து, மனரீதியாக மிகவும் துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. மேலும் மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் முறையான விசாரணை நடத்தி தனது மகளின் உயிரிழப்புக்கு காரணமான மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
College student committed suicide by hanging in odisha