IIT கவுகாத்தி உருவாக்கிய அதிநவீன AI ரோபோக்கள் – இந்திய எல்லைப் பாதுகாப்பில் புதிய புரட்சி! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் புதிய முயற்சியில், IIT கவுகாத்தி மற்றும் டா ஸ்பேஷியோ ரோபோடிக் லேபரேட்டரி (TSRL) இணைந்து AI தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்களை உருவாக்கியுள்ளன. இந்த ரோபோக்கள் சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இருப்பதுடன், பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பயன்படும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) அனுமதி பெற்ற இந்த ரோபோக்கள், இந்திய ராணுவத்தால் கள பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

நிலப்பரப்பை உணர்ந்து செயல்படும் திறன் – மலைப்பாங்கான பகுதிகளிலும், கடுமையான வானிலை சூழலிலும் சிறப்பாக செயல்படும்.

தானியங்கி கண்காணிப்பு – AI தொழில்நுட்பம் மூலம் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உதவும்.

24/7 கண்காணிப்பு – மனிதர்களின் தலையீடு இல்லாமல், நாளும் இரவும் கண்காணிக்கும் திறன்.

IIT கவுகாத்தி தொழில்நுட்ப மையத்தின் தலைவர் கேயூர் சொராத்தியா கூறுகையில், "இந்த புதிய கண்டுபிடிப்பு இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஒரு மைல்கல்லாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த ரோபோக்கள் எல்லைப் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, பெரும் பேரழிவுகளின் போது மீட்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படும் எனவும் கூறியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cutting edge AI robots developed by IIT Guwahati a new revolution in Indian border security


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->