தஞ்சாவூர் : காரில் பயங்கரமான ஆயுதங்களுடன் 5 பேர் கைது! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் : அம்மாபேட்டையில் போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் பதிவு எண் பலகை இல்லாமல் கார் ஒன்று சென்றது.

அதனை பார்த்த போலீசார் சந்தேகத்தில் காரை மடக்கி நிறுத்தினர். அப்போது காரில் இருந்த 6 பேரில் ஒருவர் மட்டும் இறங்கி தப்பித்து ஓடி விட்டார். 

போலீசார் காரை சோதனை செய்த போது, அதில் பயங்கரமான 2 அரிவாள்கள் இருந்தது தெரியவந்தது. 

இது குறித்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள், தஞ்சை மாரியம்மன் கோவிலை சேர்ந்த பிரகாஷ் (வயது 31), புதுக்கோட்டை சேர்ந்த ராம்குமார் (33), ஒரத்தநாட்டை சேர்ந்த பாலதண்டாயுதம் (35), அருந்தவபுரம் மன்னர் மன்னன் ( 24) , வீரசேகரன் என்பது தெரியவந்தது. 

மேலும் இவர்கள், யாரும் இல்லாத வீடுகளில் கொள்ளையடிக்க இவ்வாறு காரில் சுற்றி திரிவதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்த 2 அரிவாள்களையும் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய அந்த ஒரு நபரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dangerous weapons 5 peoples arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->