5ம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை கைது...!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்திரிக்கோலால் தாக்கிய ஆசிரியை முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் வெறும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மத்திய டில்லியில் பிராத்மிக் வித்யாலயா என்ற மாநகராட்சி பள்ளியில் ஆசிரியை கீதா தேஷ்வால் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பொழுது ஒரு மாணவியை கத்திரிக்கோலால் தாக்கியதோடு முதல் மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்களும் ஏராளமான பொதுமக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியையிடம் மாணவியை தாக்கியது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi teacher threw the 5th class student from the floor was arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->