பஞ்சாப்: இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 5 கிலோ ஹெராயின் கடத்திய ட்ரோன் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வயல்களில் இருந்து ட்ரோன், போதைப்பொருள் அடங்கிய பாக்கெட்டுகளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தலைமை இயக்குனர் சவுரவ் யாதவ், 5 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெக்சாகாப்டர் டிரோனை போலீசார் கைப்பற்றினர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த திங்களன்று, அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் விதமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரண்டு பாகிஸ்தான் ட்ரோன்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இந்த இரண்டு ஹெக்ஸாகோப்டர்களிலும் சுமார் 10 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய நிலையில், தற்பொழுது பஞ்சாப் மாநிலம், இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 5 கிலோ ஹெராயின் கடத்திய ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drone carrying 5 kg heroin seized near India Pakistan border


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->