இமாச்சல பிரதேசத்தில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் இன்று 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் சாம்பா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று அதிகாலை 12.38 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டது.

மேலும் சாம்பா மாவட்டத்தின் திஸ்ஸா பகுதிக்கு அருகில் உள்ள தார் மக்கான் என்ற இடத்தில் ஏற்பட்டதாகப் பேரிடர் மேலாண்மை சிறப்ப செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 

ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் கடந்த நவம்பர் 16ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டிக்கு வட- வடமேற்கே 27 கி.மீ தொலைவில் இரவு 9.32 மணியளவில், 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Himachal Pradesh


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->