அதிகாலையில் குலுங்கிய மணிப்பூர் - ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவு.!
earthquake in manipur
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.இதேபோல், நேற்று மாலை 4.29 மணியளவில் சீனாவின் ஆட்சி பகுதிக்கு உட்பட்ட ஜிசாங் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தthaaga தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.