காரைக்காலில் பரபரப்பு - 8 ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை - குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் அருகே திருப்பட்டினம் பகுதியில் பதிமூன்று வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மாணவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிறுவன் அதேபகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் காரைக்கால் முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight class student murder in karaikal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->