13 வயது மகளை மூன்று மாத கர்ப்பமாக்கிய தந்தை.! போலீசார் வலைவீச்சு - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் 13 வயது மகளை 3 மாத கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் ஜீவர்கி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி சம்பவத்தன்று வாந்தி மற்றும் மயக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் மருத்துவர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மருத்துவர் புகார் அளித்தார். இதையறிந்த சிறுமியின் தந்தை தலைமறைவானார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தொப்பி ஓடிய சிறுமியின் தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father made 13 year old daughter three months pregnant in Karnataka


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->