உத்திரபிரதேசம்.! ரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் ஹபூர் பகுதியில் ரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீ விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire at a chemical factory in uttarpradesh


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->