டெல்லி : பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை.! அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

இதையடுத்து, தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதனால், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்காக, டெல்லி நீதிமன்றம் தடை விதித்ததனால், 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் விற்பனை, உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு டெல்லி அரசு முழுத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், தலைநகர் புதுடெல்லியை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாட்டோம். எங்கள் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது என்று நீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தீபாவளி விடுமுறைக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

firecracks ban in delhi supreme court order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->