எமனாக வந்த மணல் லாரி - பரிதாபமாக பறிபோன 5 உயிர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டம் பீலகி படதின்னி கிராமத்தில் சேர்ந்தவர்கள் யங்கப்பா - யல்லவ்வா தம்பதியர். இவர்களது மகன் புந்தலிகா, மகள் நாகவ்வா. இவர்கள் நான்கு பேரும் நாகவ்வாவின் கணவர் அசோக் உடன் இணைந்து வயலில் வேலை செய்து விட்டு சாலையோரம் நின்றிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையோரம் நின்றிருந்த ஐந்து பேர் மீதும் மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரியை கிரேன் உதவியுடன் தூக்கி, லாரியின் அடியில் சிக்கியிருந்த ஐந்து பேரையும் சடலமாக மீட்டனர்.
பின்னர் ஐந்து உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples died in karnataga for accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->