மணிப்பூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் - 4 பேர் கைது.!!
four terrorist arrested in manipur
மணிப்பூர் மாநிலத்தில் குகி மற்றும் மெய்தி இன மக்களிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை ஏற்பட்டு நீடித்து வருகிறது. இந்த வன்முறையில், இருபிரிவினராய்ச் சேர்ந்து மொத்தம் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனா். இந்த வன்முறையை சமாளிக்க முடியாததால் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகினார்.

இதன் காரணமாக அங்கு சட்டபிரிவு 56-ன்படி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நம்போல் பஜாரில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருந்து சமூக விரோத செயல்களுக்கு சதி தீட்டி வருவதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் படி ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four terrorist arrested in manipur