கொடூரம்... மாடியில் இருந்து விழுந்த நாய் - நொடியில் பறிபோன சிறுமியின் உயிர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் போன் ஒருவர் தனது மூன்று வயது குழந்தையுடன் தெருவில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து நாய் தவறி தெருவில் நடந்துச் சென்ற சிறுமியின் மீது விழுந்துள்ளது.

இதில் மூன்று வயது சிறுமி பரிதமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் நாய் உரிமையாளர் ஜஹர் சயீத் மீது வழக்குப்பதிவு செய்த போலிசார் அவரைக் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl died dog fell down on body in maharastra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->