கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள்தான் காரணம்.. பிரியங்கா காந்தி, கார்கே குற்றச்சாட்டு!
Half-baked arrangements are the cause of the stampede. Priyanka Gandhi, Kharge
மகா கும்பமேளாவில் பக்தர்கள் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்ற உள்ளது.இங்கு உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்தநிலையில் அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், மகா கும்பமேளாவில் பக்தர்கள் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி,இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உடலை குடும்பத்தினரிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்றும் மேலும், இனி நடைபெறும் நீராடல் உள்ளிட்ட சடங்குகள் பாதுகாப்பாக நடைபெற மாநில அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் நீராட வேண்டும் என்றும் கங்கை அன்னை அனைவரையும் பாதுகாக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள், VIPகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவைதான் காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் ஒன்றிய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பக்தர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, மற்றுமோர் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Half-baked arrangements are the cause of the stampede. Priyanka Gandhi, Kharge