இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் நரேந்திர மோடியை தேசிய தலைநகரில் சந்திப்பதற்கு முன்னதாக, நேற்று செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அம்மாநில அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் 15வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி சிம்லாவில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Himachal Pradesh CM Sukhvinder Singh Sukhu tests positive Covid


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->