பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி: இந்திய விமானப்படை தீவிர போர்ப்பயிற்சி!
Indian Air Force conducts massive military drill after terror attack
பரபரப்பான சூழ்நிலையில், இந்திய விமானப்படை தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர்சுட்டுக்கொல்லப்பட்டனர்.அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய விமானப்படை நேற்று தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த பயிற்சியில் சுகோய்-30 ரக விமானங்கள், ரபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இது வழக்கமான பயிற்சிதான் என கூறப்படுகிறது.
English Summary
Indian Air Force conducts massive military drill after terror attack