பாகிஸ்தான் மாலிர் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை; காரணம் என்ன?
Indian fisherman commits suicide in Pakistan Malir jail
பாகிஸ்தானின் கடல் எல்லையில் சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை சேர்ந்த கவுரவ் ராம் ஆனந்த் (52) என்ற என்ற மீனவரை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து அங்குள்ள உள்ள மாலிர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில் உள்ள கழிவறையில் மீனவர் ஆனந்த் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை சிறை கண்காணிப்பாளர் அர்ஷாத் ஹுசைன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைக்கு பின்பு, ஆனந்தின் குடும்பத்தினரிடம் அவரது உடலை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறைகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் பெரும்பாலான இந்திய மீனவர்கள் குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் சிறைகளில் உள்ள மீனவர்களின் நலன் குறித்து 'எத்தி'(Ethi) மற்றும் 'அன்சார் பர்னி'(Ansar Burney) ஆகிய அறக்கட்டளைகள் கண்காணித்து வருகின்றன.
தற்போது, பாகிஸ்தானில் சுமார் 190 இந்திய மீனவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கடுமையான மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 'எத்தி' அறக்கட்டளையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian fisherman commits suicide in Pakistan Malir jail