வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக மும்பையில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்..! - Seithipunal
Seithipunal


ஜெய்ப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு  மிரட்டல் விடுக்கட்டுள்ளது. இதனை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது;  "ஜெய்ப்பூரிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் ஒரு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, 20.43 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ''விமானம் 20.50 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. தற்போது விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் உள்ளன. CSMIA விமான நிறுவனம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமையாக உள்ளது'' என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IndiGo flight makes emergency landing in Mumbai due to bomb threat


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->