டெல்லி : பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்த கபடி வீராங்கனை - போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியைச் சேர்ந்த இருபத்தேழு வயதுடைய கபடி வீராங்கனை ஒருவர் தன்னுடைய பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது டெல்லி துவாரகாவில் உள்ள பாபா அரிதாஸ்நகர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, "பயிற்சியாளர் ஜோகிந்தரிடம் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்தே கபடி பயிற்சி பெற்று வந்தேன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு பயிற்சியாளர் தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார் அப்போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் ரூ.40 லட்சத்துக்கு மேல் வாங்கியுள்ளார்" என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் படி, போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதையடுத்து, நேற்று பாதிப்புக்குள்ளான சிறுமியிடம் சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிப்பதற்கு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக மல்யுத்த சம்மேளன தலைவர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் மக்களிடையே பெரும் பரபரப்பாக உள்ள நிலையில், தற்போது வந்துள்ள இந்த புகார், விளையாட்டுத்துறையில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kabbadi player complaint on coach for sexual harassment


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->