கேரள மக்களே உஷார்... அடுத்த 5 நாட்களுக்கு... ''மஞ்சள், ஆரஞ்சு'' எச்சரிக்கை.!
Kerala 5 days rain warning
வடக்கு கேரளா முதல் மகாராஷ்டிரா வரை உள்ள கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் மத்திய மற்றும் வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு அதிவேகமான அலைகள் மற்றும் புயல்கள் எழ வாய்ப்புள்ளதால் மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை காரணமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் ஆலப்புழா, கோட்டையம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் புயல் காரணமாக மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
English Summary
Kerala 5 days rain warning