மகாராஷ்டிரா : பட்டாசு ஆலையில் வெடி விபத்து.! 5 பேர் பலி - 25 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டம் சிராலா பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. 

அப்போது ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பகுதியில் பிற்பகல் மூன்று மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை கட்டிடம் சுக்குநூறாக நொறுங்கி, தீ பற்றி எரிந்தது. 

நொடியில் நடைபெற்ற இந்த பயங்கர வெடி விபத்தில் ஆலையில் உள்ளே இருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பலமணி நேர போராட்டத்திற்குப்பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து பிறகு, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 25 காயம் அடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharashtra five peoples died and twenty five peoples injury for fircarcker factory fire accident


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->