வெளுத்து வாங்கிய மழை - திருச்சிக்கு வந்த விமானம் கொச்சியில் தரையிறக்கம்.! - Seithipunal
Seithipunal


மழை பெய்ததால் மலேசியாவில் இருந்து வந்த விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை முதல் மிக கனமழைவரை பெய்து வருகிறது. இந்த மழையால், விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது கனமழை பெய்துகொண்டிருந்தது.

இதனால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் வானிலை சீரானதும் விமானம் கொச்சியில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maleysia flight landing in kochin for rain


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->